இலவச மரக்கன்றுகள் தேவைப்படுவோர் அழைக்கவும்
PMR சக்தி - 99429 10058

 

மரக்கன்றுகள் நாட்கள் வாரியாக நட்ட புகைப்படங்கள்


July 14, 2020

இருப்பிடம் / ஆய : 11.284510, 77.590914
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று ஆனி 30 (14-07-20) செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு
👉 பவானி சாலை, காடபாளையம் பிரிவுக்கு எதிரில் உள்ள சாலையில் 3 மரக்கன்றுகள் நடப்பட்டன.

August 23, 2019

இருப்பிடம் / ஆய : 11.251838, 77.542700
நமது நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து ஆவணி 6, (23-8-19) காலை 7 மணிக்கு,
👉 பெருந்துறை கோவை சாலையில் உள்ள ஏரிக்கருப்பராயன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் (முன்புறமாக) ஆலமரம் 9, அரசமரம் 1 உட்பட 15 மரக்கன்றுகள் நடப்பட்டன.

August 17, 2019

இருப்பிடம் / ஆய : 11.208960, 77.701280
நமது நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊர் கிராம மக்கள் இணைந்து ஆடி 32, ஆவணி 1 (17,18-8-19) ஆகிய நாள்களில்
👉 அனுமன்பள்ளி அருகிலுள்ள இராசாம்பாளையத்தில் ஊர்விழாவாக மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.
👉 சென்ற ஆண்டு காமராஜர் பிறந்த நாளன்று(15-07-18) நடப்பட்ட 155 மரக்கன்றுகளும் சிறப்பாக வளர்ந்துள்ளன.

March 24, 2019

இருப்பிடம் / ஆய : 11.160436, 77.601044
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் பங்குனி 10 (24-3-19) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் நமது சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இருபக்கங்களிலும் உள்ள சுமார் 350 மரக்கன்றுகளுக்கு நீர் விட்டோம்.காலை குழுவில் பணியாற்றியவர்கள் திரு.சுரேஷ் (இயற்கை மருத்துவர்), திரு.கார்த்திகேயன் (மேட்டுக்கடை) மற்றும் அடியேன்.. மாலை குழுவில் பணியாற்றியவர்கள் திரு.கோபிநாத்(ஆசிரியர்) மற்றும் யுவராஜ் (பெரிய வேட்டுவபாளையம்). வாகன உதவி திரு.வைத்தீசுவரன் மற்றும் திரு.செயந்த்.. பணி தொடருமுங்க

March 9, 2019

இருப்பிடம் / ஆய : 11.160436, 77.601044
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று மாசி 25 (09-03-19) சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் நமது இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக, சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலையின் இருபக்கங்களிலும் உள்ள சுமார் 200 மரக்கன்றுகளுக்கு நீர் விட்டு பராமரித்து வந்தோம்.முருகன் அருளால் இப்புனித பணியில் ஈடுபடவும், சமுதாய பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முருகப்பெருமானுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறோமுங்க.

March 2, 2019

இருப்பிடம் / ஆய : 11.160436, 77.601044
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மாசி 18 (02-03-2019) காலை 11 மணிக்கு மேல் நமது இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் தார்சாலை வழியில் உள்ள சுமார் 200 மரக்கன்றுகளுக்கு நீர் விடப்பட்டது.சிறுதானி(mini auto) மலை ஏறுமா? என்று சோதனை ஓட்டம் நடத்த வாகனம் அளித்து உதவிய நமது மன்ற உறுப்பினர்கள் வைத்தீசுவரன் மற்றும் செயந்திற்கும்,1000 லிட்டர் தொட்டியில் நீர் நிரப்பிக் கொடுத்த சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோமுங்க.சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் விரைவில் நமது மன்ற வாகனத்தின் மூலமாக நீர் விடப்படும்.வாகனம் வாங்க இதுவரை சுமார் ₹.14,000/- வரை நன்கொடை கிடைத்துள்ளது.

February 24, 2019

இருப்பிடம் / ஆய : 11.265658, 77.562743
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று மாசி 12 (24-02-18) காலை 9 மணி முதல்
👉 பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் உடன் இணைந்து இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் நெகிழி ஒழிப்பு மற்றும்
👉 கோயம்புத்தூர் ரோட்டில் உள்ள கருக்கங்காட்டூரில் 7 மரக்கன்றுகள்
நடப்பட்டன.

February 3, 2019

இருப்பிடம் / ஆய : 11.311131, 77.639446
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று தை 20 (03-02-19) ஞாயிறு காலை 8 மணி முதல்
👉 கதிரம்பட்டியில் உள்ள புதிய தடுப்பு அணை அருகில் 29 மரக்கன்றுகள் மற்றும்
👉 கதிரம்பட்டியில் உள்ள குமரன் நகரில் 2 மரக்கன்றுகள்
நடப்பட்டன.

January 11, 2019

இருப்பிடம் / ஆய : 11.284558, 77.591039
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று மார்கழி 27 (11-01-19) வெள்ளிக்கிழமை மாலை 4 மணி
👉 பவானி ரோடு, காடபாளையம் பிரிவுக்கு எதிரில் உள்ள ரோட்டில் 4 மரக்கன்றுகள்
நடப்பட்டன.

December 30, 2018

செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்கழி 15 (30-12-18) காலை 8 மணி முதல்
👉 சிலேட்டர்புரம் தன்னார்வலர்கள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் நமது இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்களின் துணையோடு சுமார் 200 பனைவிதைகள் ஊன்றப்பட்டு், 17 பழ மரக்கன்றுகளை
நடப்பட்டன.

November 18, 2018

இருப்பிடம் / ஆய : 11.275588, 77.594262
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று கார்த்திகை 2 (18-11-18) ஞாயிறன்று பெருந்துறை, ஈரோடு சாலையில் உள்ள
👉 ஜீவா நகர் பகுதியில் 10 மரக்கன்றுகள்
நட்டுள்ளோம். மேலும்,
👉 பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அடர்வனத்தில்(பகுதி -1) முளைத்திருந்த களைச் செடிகளை நீக்கினோம்.

November 4, 2018

இருப்பிடம் / ஆய : 11.1464688,77.7173783
(செயல்திட்டம்-1.மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலமாக இன்று ஐப்பசி 18 (04-11-18) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை
👉 அறச்சலூர் அருகே உள்ள வெங்கமேடு என்னும் கிராமத்தில், ஒருங்கிணைப்பாளர் திரு.கார்த்தி அவர்களது முயற்சியின் மூலமாக அவரது நண்பர்கள் உதவியுடன் சுமார் 120 மரக்கன்றுகள்
நடப்பட்டன.

October 24, 2018

இருப்பிடம் / ஆய : 11.300325, 77.586575
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஐப்பசி 7(24-10-18),
👉 கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 50 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, சுற்றிவுள்ள மாணவர்கள் வீடுகளில்
நடப்பட்டன.

October 21, 2018

இருப்பிடம் / ஆய : 11.242702, 77.568793
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஐப்பசி 4(21-10-18), ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு
👉 பெரிய வேட்டுபாளையம் இச்சி காடு பகுதியில் 25 மரக்கன்றுகள்
நடப்பட்டன.

September 9, 2018

இருப்பிடம் / ஆய : 11.278427, 77.601409
செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஆவணி 24(9-9-18), ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு
👉 ஈரோடு சாலையிலுள்ள பெரிய காடு பகுதியில் 10 மரக்கன்றுகள்
நடப்பட்டன.

September 1, 2018

இருப்பிடம் / ஆய : 11.203763, 77.647154
(செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஆவணி 16 (01-09-2018), சனிக்கிழமை மாலை 3 மணி முதல்
👉 வெள்ளோடு அருகில் உள்ள ஞானிபாளையத்தில் 15 மரக்கன்றுகள்
நட்டுள்ளோம்.

August 26, 2018

இருப்பிடம் / ஆய : 11.279489, 77.600929
(செயல்திட்டம் - 1 (மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஆவணி 10( 26-8-18),ஞாயிறு அன்று காலை 7 மணிக்கு
👉 ஈரோடு சாலையிலுள்ள வெங்கமேடு அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள பொது வழியில் 21 மரக்கன்றுகள்
நட்டுள்ளோம்.

August 19, 2018

இருப்பிடம் / ஆய : 11.209638, 77.697811
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆவணி - 3 (19-08-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 அனுமன்பள்ளி அருகிலுள்ள ராசாம்பாளையம் பகுதியில் 32 மரக்கன்றுகளை நட்டுள்ளோம் மற்றும்
👉 150 முதல் 200 பனைவிதைகளை அருகிலுள்ள மந்திரிபாளையம் குளத்தில் விதைக்கப்பட்டன.

August 12, 2018

இருப்பிடம் / ஆய : 11.280472, 77.573795
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆடி - 27 (12-08-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 கலைமகள் திருமண மண்டபம் பின்புறம் , குன்னத்தூர் சாலை பகுதியில் 10 மரக்கன்றுகளை
நட்டுள்ளோம்.

August 5, 2018

இருப்பிடம் / ஆய : 11.266316, 77.590410
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆடி - 20 (05-08-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 V.C.V நகர், பணிக்கம்பாளையம் சாலை பகுதியில் 12 மரக்கன்றுகளை
நட்டுள்ளோம்.

July 29, 2018

இருப்பிடம் / ஆய : 11.278112, 77.569014
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆடி - 13 (29-07-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 மாயா குடியிருப்பு (MAYA AVENUE) குன்னத்தூர் சாலை
பகுதியில் 13 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

July 22, 2018

இருப்பிடம் / ஆய : 11.259525, 77.580477
இருப்பிடம் / ஆய : 11.273618, 77.579371
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆடி - 6 (22-07-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 சென்னிமலை சாலை மற்றும் ராச வீதி பகுதியில் 15 மரக்கன்றுகளை
நட்டுள்ளோம்.

July 21, 2018

இருப்பிடம் / ஆய : 11.270781, 77.589352
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக இன்று ஆடி-5 (21-07-2018) மாலை 5 மணி முதல்
👉 தோப்புபாளையம் சாலையில் உள்ள பணிக்கம்பாளையம் பிரிவில் 2 மரக்கன்றுகளை
நட்டுள்ளோம்.

July 15, 2018

இருப்பிடம் / ஆய : 11.209638, 77.697811
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக இன்று ஆனி-31 (15-07-2018) காலை 6 மணி முதல்
👉 அனுமன்பள்ளி அருகிலுள்ள ராசாம்பாளையம் பகுதியில் 155 மரக்கன்றுகளை
நட்டுள்ளோம். இளையபாரதம் நற்பணி மன்றத்தின் செயல் வீரர்கள், இளைஞர்கள்,அரசுப் பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இவ்வூர் பொதுமக்கள் ஆகியோரது துணையுடன் இப்பணி மிகச்சிறப்பாக நடந்தது.

July 8, 2018

இருப்பிடம் / ஆய : 11.277397, 77.570941
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆனி-24 (08-07-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 மாயா குடியிருப்பு (MAYA AVENUE) குன்னத்தூர் சாலை
பகுதியில் 33 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

July 1, 2018

இருப்பிடம் / ஆய : 11.267389, 77.589466
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆனி-17 (01-07-2018) அன்று காலை 7 மணிக்கு
👉 V.C.V நகர், பணிக்கம்பாளையம் பிரிவு-(சென்ற வார தொடர்ச்சி)
பகுதியில் 16 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

June 24, 2018

இருப்பிடம் / ஆய : 11.268151, 77.589194
(செயல்திட்டம்-1 மரக்கன்றுகளை மரமாக்குவோம்) மூலமாக ஆனி-10 (24-06-2018)அன்று காலை 7 மணிக்கு
👉 V.C.V நகர், பணிக்கம்பாளையம் பிரிவு பகுதியில் 16 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

November 13, 2017

இருப்பிடம் / ஆய : 11.284472, 77.590503
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஐப்பசி 27 (13.11.17) திங்கட்கிழமை மாலை 5 மணி முதல்
👉 பவானி ரோடு, காடபாளையம் பிரிவு, சுண்ணாம்பு சூளை வீதியில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன.

November 1, 2017

இருப்பிடம் / ஆய : 11.262966,77.4790483
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஐப்பசி 15 (01.11.17) புதன் மதியம் 2 மணி முதல்
👉 கைக்கோளபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, புதிய கட்டிடத்தில் 55 மரக்கன்றுகள் நட்டு உள்ளோம்.

October 22, 2017

இருப்பிடம் / ஆய : 11.251942, 77.580392
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஐப்பசி 5 (22.10.17) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்
👉 சென்னிமலை சாலையில் உள்ள SLN நகரில் 5 மரக்கன்றுகள் நட்டு உள்ளோம்.

October 15, 2017

இருப்பிடம் / ஆய : 11.251942, 77.580392
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் புரட்டாசி 29 (15.10.17) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்
👉 சென்னிமலை சாலையில் உள்ள SLN நகரில் 12 மரக்கன்றுகள் நட்டு உள்ளோம்.

October 7, 2017

இருப்பிடம் / ஆய : 11.2750008,77.57888
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் புரட்டாசி 21 (07.10.17) சனிக்கிழமை மாலை 5 மணி முதல்
👉 பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ வீதியில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.

July 2, 2017

இருப்பிடம் / ஆய : 11.284558, 77.591039
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஆனி 18 (02.07.17) ஞாயிறு காலை 8 மணி முதல்
👉 பவானி ரோடு, காடபாளையம் பிரிவுக்கு எதிரில் உள்ள ரோட்டில், நான்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

June 25, 2017

இருப்பிடம் / ஆய : 11.179251, 77.597489
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் ஆனி 11 (25.06.17) ஞாயிறு காலை 8 மணி முதல்
👉 சென்னிமலை, கொமரப்பா செங்குந்தர் பள்ளி எதிரில் உள்ள ரோட்டில், 27 மரக்கன்றுகள் நடப்பட்டன.

January 8, 2017

இருப்பிடம் / ஆய : 11.278983,77.591911
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மார்கழி 24 (08.01.17) ஞாயிறு காலை 7 மணி முதல்
👉 ஈரோடு சாலையில்,முருகன் திரையரங்கம் அருகிலும்,எதிரிலும் 20 மரக்கன்றுகளும் நட்டுள்ளோம்.
👉 இன்று வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திலிருந்து, வனத்துறை அலுவலர் திரு.விசயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து 500வது மரக்கன்றினை நட்டார்.

January 7, 2017

இருப்பிடம் / ஆய : 11.284472, 77.590503
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மார்கழி 23 (07.01.17) சனிக்கிழமை மாலை 5 மணி முதல்
👉 பவானி ரோடு, காடபாளையம் பிரிவு, சுண்ணாம்பு சூளை வீதியில் ஏழு மரக்கன்றுகள் நடப்பட்டன.

December 31, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மார்கழி 16 (31.12.16) சனிக்கிழமை காலை 7 மணி முதல்
👉 மேக்கூர் பகுதியிலுள்ள கள்ளியம்புதூர் சாலையில் 9 மரக்கன்றுகளும்,
👉 முதலியார் வீதியில் 18 மரக்கன்றுகளும்,
👉 கொங்கு பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் 13 மரக்கன்றுகளும்,
👉 ஆசிரியர் ஒருவர் இல்லத்தில் 2 மரக்கன்றுகளும் நட்டுள்ளோம்.
👉 இதுவரை 473 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
👉 500வது மரக்கன்றை நோக்கி..

December 25, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மார்கழி 10 (25.12.16) ஞாயிறு காலை 7 மணி முதல்
👉 வெங்கமேடு, ஆர். ஜி. மோட்டார்ஸ் பின்புறம் 7 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

December 23, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மார்கழி 8 (23.12.16) வெள்ளி காலை 10.30 மணி முதல்
👉 கருமாண்டிசெல்லிபாளையம் காலனி அங்கன்வாடியில் நான்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

December 18, 2016

இருப்பிடம் / ஆய : 11.250676,77.579419
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் மார்கழி 3 (18.12.16) ஞாயிறு காலை 7 மணி முதல்
👉 சென்னிமலை சாலையில் அமைந்துள்ள கதிர் குடியிருப்பு (Kathir avenue) பகுதியில் 23 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

December 11, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் கார்த்திகை 26 (11.12.16) ஞாயிறு காலை 7 மணி முதல்
👉 வாய்கால்மேடு - லேனா அவன்யூ பகுதிக்குள் 17 மரக்கன்றுகள் நடப்பட்டன.

December 10, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் கார்த்திகை 25 (10.12.16) சனி மாலை 5 மணி முதல்
👉 சின்ன மடத்துப்பாளையம் பகுதிக்குள் 4 மரக்கன்றுகளையும்,
👉 சென்னிமலை ரோடு, கவின் நகர் / சிவசக்தி நகர் 2 மரக்கன்றுகளையும் நட்டுள்ளோம்.

December 7, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் கார்த்திகை 22 (07.12.16) புதன் காலை 7 மணி முதல்
👉 சின்ன மடத்துப்பாளையம் சாலையின் இரு பக்கங்களிலும் 11 மரக்கன்றுகளை நட்டு உள்ளோம்.

December 4, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் கார்த்திகை 19 (04.12.16) ஞாயிறு காலை 7 மணி முதல்
👉 சென்னியவலசு - கொங்கு கல்லூரி செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் 12 மரக்கன்றுகளையும்,
👉 சின்ன மடத்துப்பாளையம் பகுதியில் 6 மரக்கன்றுகளையும் நட்டுள்ளோம்.

November 27, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் கார்த்திகை 12 (27.11.16) ஞாயிறு காலை 6.30 மணி முதல்
👉 சென்னியவலசு - கொங்கு கல்லூரி செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் 22 மரக்கன்றுகளை நட்டு உள்ளோம்.

November 20, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று கார்த்திகை 5 (20.11.16) ஞாயிறு காலை 6.30 மணி முதல்
👉 குன்னத்தூர் சாலையில் அமைந்துள்ள மருத்துவர் ராம்பிரசாத்(கள்ளியம்புதூர்) அவர்களின் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதியில் 11 மரக்கன்றுகளும்,
👉 நவீன தகன மேடை(அமைதிப்பூங்கா)அமைந்து வரும் இடத்திற்குப் பின்புறம் உள்ள குளத்துத் தோட்டம் பகுதியில் 26 மரக்கன்றுகளும்,
👉 குன்னத்தூர் சாலையில் (முருகன் பாத்திரக்கடையின் அருகிலுள்ள) கைபேசிக் கடையின் முன் 2 மரக்கன்றுகளும் நட்டுள்ளோம்.

November 16, 2016

மடத்துப்பாளையம் ரோடு பகுதிக்குள் நான்கு மரக்கன்றுகளும் மற்றும் குண்டையன்தோட்டம் பகுதிக்குள் ஒரு மரக்கன்றும் நடப்பட்டன.

November 14, 2016

மடத்துப்பாளையம் ரோடு அருகில் இரண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

November 13, 2016

1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலம் இன்று ஐப்பசி 28 (13.11.16) ஞாயிறு காலை 6.30 மணி முதல்
👉திருவேங்கிடம்பாளையம் பகுதிக்குள் 10 மரக்கன்றுகளும்,
👉நல்லப்பாஸ் திரையரங்கம்(Theatre) செல்லும் சாலை ஓரங்களில் 16 மரக்கன்றுகளும்,
👉குன்னத்தூர் சாலையில் முருகன் பாத்திரக்கடையின்(Murugan metal mart) முன்பு 2 மரக்கன்றுகளும்,Orange net centre முன்பு 1 மரக்கன்றும்,ஈரோடு சாலையில் தங்கம் புத்தகக் கடையின் முன் 2 மரக்கன்றுகளும் மற்றும் இந்திரா இரும்புப் பொருள்கள் கடை(Indira steels) முன் 1 மரக்கன்றும் நட்டுள்ளோம்.

November 9, 2016

பெருந்துறை தெற்கு பள்ளியில் ஆறு மரக்கன்றுகள் நடப்பட்டன.

November 6, 2016

இருப்பிடம் / ஆய : 11.260204,77.604763
1(மரக்கன்றுகளை மரமாக்குதல்) மூலமாக ஐப்பசி 21(06.11.16,ஞாயிறு) அன்று, சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்படி,தேச நலனில் அக்கறை கொண்ட இளைஞர் படையின் துணைக் கொண்டு திருவேங்கிடம்பாளையம் பகுதிக்குள் 30+ மரக்கன்றுகளும், குமாக்காளிபாளையம்செல்லும் சாலை ஓரங்களில் 30+ மரக்கன்றுகளும் நடப்பட்டன.மேலும்,20+ மரக்கன்றுகள் நட, மண் அள்ளும் இயந்திரம் மூலம் குழிகள் (இரவு 7 மணி வரை) தோண்டப்பட்டு, இன்று (ஐப்பசி 22) நடப்படுகின்றன.

October 30, 2016

இன்று 30.10.16(ஞாயிறு) குண்டையன்தோட்டம் பகுதிக்குள் 9 மரக்கன்றுகளும், சாராயக்காரன்தோட்டம் பகுதிக்குள் 16 மரக்கன்றுகளையும் நட்டுவிட்டோம்.


October 23, 2016

இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இன்று 23.10.16(ஞாயிறு) 26 மரக்கன்றுகளை பெத்தாம்பாளையம் சாலையிலுள்ள வள்ளலார் வீதியில் நட்டுள்ளோம்.

October 17, 2016

இன்று மாலை 10 மரக்கன்றுகளை ராசவீதி,சாராயக்காரன் தோட்டம் மற்றும் சின்ன மடத்துப்பாளையம் பகுதிகளில் நட்டோம்.


October 15, 2016

(15.10.16) நேற்று மாலை 5 மரக்கன்றுகளையும் நமது மேற்குப் பள்ளிக்கு முன் நட்டுவிட்டோம்.

October 9, 2016

இன்று புரட்டாசி 23 (9.10.16) கிளுவங்காட்டூர் - 10, குண்டையன்தோட்டம் - 6, ராசவீதி -4 , கோட்டைமேடு - 2 ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.



Copyright © 2025 ILAYA BHARATHAM ILAIGNAR NARPANI MANDRAM