ஏழ்மை நிலையில் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அளித்து படிக்க உதவி புரிதல்.
ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவர்களின் தேவை அறிந்து உதவி செய்தல்.
பொதுவிழாக்கள், பொங்கல் திருநாள் போன்ற தினங்களில் அந்தந்த ஊர்களில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை ஒவ்வொரு கூட்டத்தில் போதும் தீர்மானம் மூலம் நிறைவேற்றப் பாடுபடுதல்.
குறைதீர்க்கும் நாள் போன்றவைகளை அந்தந்த பகுதிகளில் நடத்தி மக்களின் குறைகளை மனு மூலம் பெற்று அரசிடம் சமர்ப்பித்தல்.
வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்குரிமையை உணர்ந்தி வாக்காளர் அடையாள அட்டை எடுக்க உதவி புரிதல்
அறிவொளி முகாம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு பெறச் செய்தல்