ஏழ்மை நிலையில் படிக்க முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகங்கள் அளித்து படிக்க உதவி புரிதல்.
ஊனமுற்றவர்கள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவர்களின் தேவை அறிந்து உதவி செய்தல்.
பொதுவிழாக்கள், பொங்கல் திருநாள் போன்ற தினங்களில் அந்தந்த ஊர்களில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்.
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை ஒவ்வொரு கூட்டத்தில் போதும் தீர்மானம் மூலம் நிறைவேற்றப் பாடுபடுதல்.
குறைதீர்க்கும் நாள் போன்றவைகளை அந்தந்த பகுதிகளில் நடத்தி மக்களின் குறைகளை மனு மூலம் பெற்று அரசிடம் சமர்ப்பித்தல்.
வாக்காளர்களுக்கு அவர்களுடைய வாக்குரிமையை உணர்ந்தி வாக்காளர் அடையாள அட்டை எடுக்க உதவி புரிதல்
அறிவொளி முகாம் நடக்கும் போது அந்தந்த பகுதிகளில் எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு பெறச் செய்தல்
இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் பற்றி
பாரதத்தாயின் குழந்தைகளான நமக்குள் சென்ற ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 15, 2001) மலர்ந்த இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றத்தின் முதலாமாண்டு பிறந்த நாள் விழாவினை உங்களுடன் இந்த "ஆண்டுமலர்" மூலம் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
ஒரு முட்டைக்குள் உறங்கும் கோழிக்குஞ்சு வெளியில் வருவதற்கான வெப்பத்தை வேண்டுமானால் தாய் தரலாம். ஆனால், ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வர வேண்டும் என்கிற விருப்பத்தை யார் தரமுடியும்? குஞ்சுக்கு அந்த ஆர்வமும் ஆசையும் தானாக இருந்தால் தான், அது வெளியில் வர முடியும். அந்த உத்வேகம் உயிரின் இயற்கை குணம். உலகில் இயக்கத்துக்கான மூல வேர்.
இந்த உத்வேகம். உற்சாகம் உள்ளவர்கள் தான் உலகை உருவாக்குகிறார்கள். இயல்பாக நம்முள் புதைந்திருக்கும் அந்த ஆற்றலை, மகா சக்தியை நாம் அடையாளம் கண்டு கொண்டால் ஜெயிக்கலாம், ஜெயித்துக் கொண்டே இருக்கலாம். "உலக வரலாறு என்பது, உள்ளபடி ஒருசில தனி மனிதர்களின் வரலாறுதான். ஆனால், அந்தத் தனிமனிதர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். இயல்பாகவே நமது இந்தியர்களுக்கு தன்னம்பிக்கையும் உத்வேகமும் இருக்கிறது. அகிம்சாவாதத்தால் நமது நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி முதல், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அறிவியல் வளர்ச்சி மூலம் பாதுகாப்பு அரணை ஏற்படுத்திய அப்துல் கலாம் வரை, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்ற ஆணி வேரிலிருந்து தான் சாதித்து இருக்கிறார்கள்.