சீமை கருவேல மரங்களை ஒழிக்க அழைக்கவும்
PMR சக்தி - 99429 10058

 

சீமை கருவேல மரங்களை நாட்கள் வாரியாக ஒழிக்கப்பட்ட புகைப்படங்கள்


April 20, 2017


செயல்திட்டம் 2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) மூலமாக சித்திரை 6 & 7 (19-4-17 & 20-4-17) ஓலப்பாளையம் மற்றும் கடப்பமடை பகுதிக்குள் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.இதற்கு நிதி உதவி அளித்த S. C.சென்னியப்பன் (Hotel chenni's)

April 16, 2017


செயல்திட்டம் 2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) மூலமாக சித்திரை 3 (16-4-17) ஈங்கூர் பஞ்சாயத்தில் மீதமிருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு நிதி உதவி அளித்த E. R.R.கார்த்திகேயன், ஈங்கூர்

April 15, 2017


செயல்திட்டம் 2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) மூலமாக பங்குனி 26 (8-4-17) முதல் சித்திரை 2 (15-4-17) முடிய ஈங்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சரவம்பதி,ஈங்கூர் ஆகிய கிராமங்களில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.இதற்கு நிதி உதவி அளித்த AGNI STEELS,ஈங்கூர்



April 9, 2017


இருப்பிடம் / ஆய :11.272013,77.582192
சீமை கருவேல மரங்களை அகற்ற சேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பங்குனி 27 (9-4-17) ஞாயிறு அன்று பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
👉 சீமை கருவேல மரங்களை அகற்ற பஞ்சாயத்து வாரியாக தன்னார்வ குழுக்களை ஏற்படுத்துதல்/ஒருங்கிணைத்தல்.
👉 விவசாயத்திற்கு அடிப்படையான மழை நீரை சேமிக்க இப்போதிருந்தே திட்டமிடல். குளம், குட்டை மற்றும் நீர்வழிப் பாதைகளைக் கண்டறிதல்.வரைபடங்களைப் பெறுதல்.
👉 நமது பெருந்துறை பகுதிக்கு வாய்கால் அல்லது குழாய்கள் மூலம் அத்திக்கடவு - அவினாசி(பெருந்துறை) திட்டத்தினை செயல்படுத்திட முழுமுயற்சி மேற்கொள்தல். இதன் மூலமாக நமது பெருந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து குளம் மற்றும் குட்டைகளை நிரப்பி விவசாயத்தை மீட்டெடுத்தல்.



April 2, 2017


இருப்பிடம் / ஆய :11.272013,77.582192
சீமை கருவேல மரங்களை அகற்ற சேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பங்குனி 20 (2-4-17) அன்று பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன👉 பெருந்துறை ஒன்றியத்தில்,பஞ்சாயத்து வாரியாக விடுபட்ட இடங்களிலுள்ள (அரசு மற்றும் தனியார்) சீமை கருவேல மரங்களை அகற்ற ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒன்றிய வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து, திட்டங்களை வகுத்து,பணிகளைத் தீவிரப்படுத்துதல். 👉 சிப்காட் வளாகத்திலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கிராமம் காக்கும் இயக்கம் மூலமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு,அழுத்தம் தருதல். 👉 சீமை கருவேல மரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகளைத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் கூறியவாறு, அவர்களது பொறுப்பில்,அந்தந்த பகுதிக்குள் சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்.👉 7 நாள்களுக்கு உண்டான செலவினை ஏற்றுக் கொண்டுள்ள DMW உரிமையாளர் திரு.சண்முகம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 👉 வாரந்தோறும் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 👉 காஞ்சிக்கோவில் பகுதிக்குள் 99% பணிகள் நிறைவுற்றதாகக் தீரன் பாசறை அமைப்பினர் தெரிவித்தனர்.அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 👉 சமூக ஆர்வலர் பசுமை நாகராசன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 👉 வீரசங்கிலி,மூங்கில்பாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பகுதிக்குள் இயங்கி வரும் சமூக அமைப்பினருடன் இணைந்து பணியாற்ற திரு.ரவி(கிராமம் காக்கும் இயக்கம்) அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இளையபாரதம் மன்றம் துணை நிற்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. 👉 வெட்டப்பட்ட கருவேல மரங்களை சிறு,சிறு துண்டுகளாக்கி விறகாக மாற்ற உதவும் நவீன கருவிகளைப் பற்றிய தகவல்களை சேகரித்தல்.

March 29, 2017


இருப்பிடம் / ஆய :11.2818723,77.519591
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்)திட்டத்தில் பங்குனி 16(29-3-17) அன்று,பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவீரணம்பாளையம் - ஆயிக்கவுண்டம்பாளையம் நீர் வழிப்பாதையில் - (தொடர்ச்சி) சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த T.N.சென்னியப்பன், திருவேங்கிடம்பாளையம்

March 28, 2017


இருப்பிடம் / ஆய :11.2814228,77.5215047
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்)திட்டத்தில் பங்குனி 15(28-3-17) அன்று,பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையம் - பெரியவீரணம்பாளையம் நீர் வழிப்பாதைகளிலுள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த ரோட்டரி சங்கம்

March 26, 2017


இருப்பிடம் / ஆய :11.306217,77.526199
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்)திட்டத்தில் பங்குனி 13(26-3-17) மற்றும் பங்குனி 14(27-3-17) அன்று,பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழேரிப்பாளையம் குளம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த அரிமா சங்கம்

March 25, 2017


இருப்பிடம் / ஆய :11.285027,77.528467
11.2834429,77.5233646
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்).பங்குனி 12(25-3-17) அன்று,பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதிகளிலுள்ள அரசு நிலங்களில் மற்றும் ஆயிக்கவுண்டம்பாளையம் முதல் வீரணம்பாளையம் பள்ளத்தில் ஒரு பகுதிகளிலிருந்த, சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த அரிமா சங்கம்

March 22, 2017


இருப்பிடம் / ஆய :11.273835,77.578182
11.273718,77.573280
11.272730,77.561750
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்).பங்குனி 9(22-3-17) அன்று,பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு அரிசன காலனி தொடங்கி மடத்துப்பாளையம் கருப்பணன் கோவில்/அரசு தொடக்கப்பள்ளி அருகில் மற்றும் கோவை சாலை செல்லும் சாலையோரங்களின் இரு பக்கங்களிலும் இருந்த பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த நவஇந்திய மாதர் சங்கம்

March 21, 2017


இருப்பிடம் / ஆய :11.265510,77.601240
11.266873,77.599555
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்).பங்குனி 8 (21-3-17) அன்று,பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட தோப்புபாளையம் - மயானம்,நாடார் காலனி மற்றும் பெரிய வேட்டுவபாளையம் பகுதிகளிலிருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த நவஇந்திய மாதர் சங்கம்

March 17, 2017


இருப்பிடம் / ஆய :11.247177,77.567455
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்).பங்குனி 4 (17-3-17) அன்று,பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய வேட்டுவபாளையம் சாலை ஓரங்களிலிருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த நவஇந்திய மாதர் சங்கம்

March 16, 2017


இருப்பிடம் / ஆய :11.245468,77.579098
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்).பங்குனி 3 (16-3-17) அன்று,பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லைமேடு - பெரிய வேட்டுவபாளையம் சாலை ஓரங்களிலிருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. இப்பணிக்கு நிதி உதவி அளித்த வைஷ்ணவி தங்க மாளிகை

March 12, 2017


இருப்பிடம் / ஆய :11.2601616,77.5928543
11.2759576,77.5850645
11.2546268,77.5677705
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 28 (12.03.2017), பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட 1.பணிக்கம்பாளையம் குளம் -தொடர்ச்சி.
2.பெருந்துறை அரசு மருத்துவமனை.
3.பெரியவேட்டுவபாளையம் தாழ்த்தப்பட்டோர் மயானம் மற்றும் சாலையோரங்கள்
ஆகிய மேற்கண்ட இடங்களில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பெருந்துறை பகுதிக்குள், அரசு நிலங்களிலேயே இன்னும் பரவலாக சீமை கருவேல மரங்கள் உள்ளன. மாதக்கணக்கில் கடும்முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை அகற்ற, வருங்கால தலைமுறையினரைக் காக்க, எங்களுடன் கைகோர்க்க ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

March 11, 2017


இருப்பிடம் / ஆய :11.2601616,77.5928543
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 27 (11.03.2017), பணிக்கம்பாளையம் குளத்தில் சீமை கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

March 7, 2017


இருப்பிடம் / ஆய :11.265535,77.585532
11.267280,77.586065
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 23 (07.03.2017), பணிக்கம்பாளையம், மங்கநாயக்கன் தோட்டத்தில், மதியம் 12 முதல் இரவு 10.30 மணி வரை (9 மணிநேரம்) (JCB இயந்திரம் மூலம்) சீமை கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

March 5, 2017


இருப்பிடம் / ஆய :11.272013,77.582192
சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு - ஒருங்கிணைப்புக் கூட்டம் மாசி 21 (5.3.17) ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
👉 பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழிக்க அரிமா மற்றும் ரோட்டரி சங்கங்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டன.
👉 எழுதிங்கள்பட்டி பகுதிக்குள் இருக்கும் சீமை கருவேல மரங்களை ஒழிக்க விநாயக குழுமத்தினர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
👉 ஓலப்பாளையம், கந்தாம்பாளைம், கடப்பமடை மற்றும் கருக்கங்காட்டூர் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை ஒழிக்க திரு. S.C.சென்னியப்பன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
👉 காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பகுதிக்குள் இருக்கும் சீமை கருவேல மரங்களை ஒழிக்க தீரன் பாசறை அமைப்பினர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
👉 பெருந்துறை மற்றும் கருமாண்டிச்செல்லிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, அரசு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நாளொன்றுக்கு 10 மணிநேரம் JCB இயந்திரம் மூலம் சுத்தப்படுத்த ஆகும் செலவை கீழ்க்கண்ட அன்பர்கள் ஏற்றுக் கொண்டனர்.
1.திரு.சௌந்திரராசன்(பசுமை இயக்கம்).
2.திரு.சண்முககணபதி (பொறியாளர்).
3.திரு.P.T.கோபாலகிருஷ்ணன்(அரிமா சங்கம்).
4. திரு.சக்திவேல் (சித்த மருத்துவர்).
5. திரு.V.N.கந்தசாமி.
6. திரு.சந்திரசேகரன் (ரோட்டரி சங்கம்).
7.திரு.பல்லவி பரமசிவம்.
8.திரு.சந்துரு (JAI TV)
9.திரு.T.N.சென்னியப்பன் (அமைதிப் பூங்கா அறக்கட்டளை).
2 நாள்களுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள்.
1.நவஇந்திய மாதர் சங்கம்.
2.வைஷ்ணவி தங்க மாளிகை.
🏹 இது தவிர V.V.National உரிமையாளர் கைப்பேசி மூலம் தனது பங்களிப்பையும் உறுதி செய்துள்ளார். 🌿பசுமை பெருந்துறை🌳 மீதும்,வருங்கால தலைமுறையினர் மீதும் உண்மையான அக்கறை கொண்டு கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,100 விழுக்காடு சீமை கருவேலான் மரங்களை ஒழிக்கும் தருவாயிலுள்ள வரப்பாளையம் "கிராமம் காக்கும் இயக்கத்தார்க்கும்",சேவை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் இளையபாரதம் இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

February 28, 2017


இருப்பிடம் / ஆய :11.273543,77.579189
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 16 (28.02.2017), மடத்துப்பாளையம் ரோடு, புதிய பேருந்து நிலையம் பின்புறம், 2 மணிநேரம் (JCB இயந்திரம் மூலம்) சீமை கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

February 26, 2017


இருப்பிடம் / ஆய :11.275210,77.573290
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 14 (26.02.2017), மடத்துப்பாளையம் அருகிலுள்ள கிளுவங்காட்டூர் பகுதியில், ஒருங்கிணைப்பாளர் இளைய.சுரேந்திரன் பொறுப்பில் 5 மணிநேரம் (JCB இயந்திரம் மூலம்) சீமை கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

February 20, 2017


இருப்பிடம் / ஆய :11.2785104,77.5963247
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 8 (20.02.2017), ஜீவா நகர், ஈரோடு ரோடு பகுதியில் மற்றும் ஆர். ஜி மோட்டார்ஸ் பின்புறம், 4 மணிநேரம் (JCB இயந்திரம் மூலம்) சீமை கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

February 19, 2017


இருப்பிடம் / ஆய :11.275163,77.574157
செயல்திட்டம் -2 (சீமை கருவேல மரங்களை வேரோடு ஒழித்தல்) இன்று மாசி 7 (19.02.2017), மடத்துப்பாளையம் அருகிலுள்ள கிளுவங்காட்டூர் பகுதியில், ஒருங்கிணைப்பாளர் இளைய.சுரேந்திரன் பொறுப்பில் 5 மணிநேரம் (JCB இயந்திரம் மூலம்) சீமை கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டன.

February 16, 2017


இருப்பிடம் / ஆய :11.272127,77.571985
ஜே. ஜே நகர் மற்றும் மடத்துப்பாளையம் ரோடு பகுதியில் மதியம் 1 முதல் 3 மணி வரை (2 மணி நேரம்) சீமை கருவேல மரங்கள் பிடுங்கப்பட்டது.

Copyright © 2025 ILAYA BHARATHAM ILAIGNAR NARPANI MANDRAM